Skip to main content

''இந்தி கத்துக்கோ என்று சொல்கிறார்கள்...''-ஸ்விகி ஊழியர்கள் வேதனை! 

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Swiggy employees are in agony!

 

ஸ்விகி நிறுவனத்தின் புதிய நடைமுறைகளுக்கு எதிராக சென்னையைச் சேர்ந்த ஸ்விகி ஊழியர்கள் கடந்த 19 ஆம் தேதியே போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்பொழுது வரை போராட்டமானது நடந்து வருகிறது.

 

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியில் சில புதிய நடைமுறைகளை அந்நிறுவனம் கொண்டுவந்துள்ளது. அதன்படி எவ்வளவு டெலிவெரிகளை கொடுத்தாலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்ற நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்விகி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பழைய நடைமுறையான ஊக்கத்தொகை, ஊதியம்  ஆகியவற்றை தொடர வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் பணிபுரிந்து வரும் ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இன்று தாம்பரம் கிழக்கு மற்றும் மேற்கு ஸ்விகி ஊழியர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சேப்பாக்கத்தில் நடந்த இந்த போராட்டத்தில் ஸ்விகி ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். போராட்டம் குறித்து ஸ்விகி ஊழியர் ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளிக்கையில், ''எங்களை ஒரு கேள்வி கூட கேட்காமல் ஸ்லாட்டையே (SLOT) மாத்திட்டாங்க. இதனால் வாரம் ஒன்றிற்கு எங்களுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அப்போ நாங்க எப்படி குடும்பத்தை நடத்த முடியும்.  மழைபெய்தால் 'ரெயின் மோட்' எனபோட்டு 15 ரூபாய் தருவார்கள். அதை இப்பொழுது 10 ரூபாயாக குறைத்து விட்டார்கள். அதையும் வாடிக்கையாளரிடம் பெற்றுத்தான் தருகிறார்கள். திராவிட  மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட ஆட்சிதான் நடக்கிறது. இங்க வேலை செய்கிற ஆட்களுக்கு தமிழ்தான் தெரியும்.

 

ஆனால் கஸ்டமர் கேரில் பேசினால் இந்தி தெரியுமா? இங்கிலீஸ் தெரியுமா? தெலுங்கு தெரியுமா? என கேட்கிறார்கள். இந்தி தெரிந்தால் மட்டுமே நாங்கள் பதில் சொல்வோம் என்பது மாதிரி இருக்கிறது. இதிலிருந்து இந்தி கத்துக்கோ என்று சொல்கிறான். நாங்க இந்தியிலேயோ, இங்கிலீஸ்லயோ பேச மாட்டோம் தமிழில்தான் பேசுவோம். விருப்பம் இருந்தா தமிழ்ல பேசு. முதலில் 12 மணி நேரம் வேலை செய்வோம் இப்போ 16 மணி நேரம் வேலை செய்ய சொல்றான். 16 மணிநேரம் வேலை செய்தாலும் 7 ஆயிரம் ரூபாய்தான் கிடைக்கும். அதில் 3 ஆயிரம் முதல் 3,500 ரூபாய் பெட்ரோலுக்கே போயிடும். இதை வெச்சு எப்படி நாங்க குடும்பம் நடத்துவோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.