ADVERTISEMENT
இந்த சம்பவத்தில் காவலர் கணேஷ் (வயது 30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த கடத்தல்காரர் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் இருவரை பிடித்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காரில் இருந்த 7 செம்மரக்கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தப்பிச் சென்ற கடத்தல்காரரையும் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
ADVERTISEMENT
செம்மரக்கடத்தலைத் தடுப்பதற்காக சென்ற போலீஸ் மீது கார் ஏற்றிய சம்பவத்தில் அவர் பலியான நிகழ்வு ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், செம்மரக் கடத்தலைத் தடுத்த போலீசை கார் ஏற்றிக்கொண்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ராமன் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
Show comments