Skip to main content

வாக்குவாதத்தில் போலீசார்கள் மீது தாக்குதல்... பேச்சுவார்த்தைக்கு சென்ற கோட்டாட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்... 

Published on 05/07/2020 | Edited on 05/07/2020
Villupuram

 

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஆனத்தூர் கிராமம். ஊர் காலனியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் முத்துராமன். வயது 30. கூலித் தொழிலாளியான இவர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு தமக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை திருமுண்டீச்சரம் கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவரிடம் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டித் தருமாறு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒப்படைத்துள்ளார். அதற்காக முதல் தவணை பணம் கொடுத்துள்ளார். 


அதன்படி வீடு கட்டும் பணி துவங்கி அடித்தளப்பணியோடு நிறுத்திவிட்டு முத்துராமனிடம் சுபாஷ் சந்திரபோஸ் இரண்டாவது தவணையாக பணம் கேட்டுள்ளார். இதனால் சுபாஷ் சந்திர போசுக்கும் முத்துராமனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு ஆனத்தூர் பகுதியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவெண்ணைநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலுவிடம் ஒப்பந்தக்காரர் சுபாஷ் சந்திர போஸ் சென்று முறையிட்டுள்ளார்.

 

அது விஷயமாக சப் இன்ஸ்பெக்டர் ஒரு போலீஸ்காரரை அழைத்துக்கொண்டு முத்துராமனிடம் விசாரணை செய்துள்ளார். அப்போது முத்துராமன் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் இருவரையும் தாக்கியதாகவும் அதில் அவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டதோடு இரண்டு பற்களும் உடைந்தனவாம். இதனால் அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 

 

இந்த தகவல் அறிந்த திருக்கோவிலூர் கோட்டாட்சியர் ராஜேந்திரன், டிஎஸ்பி நல்லசிவம், தாசில்தார் வேல்முருகன், பிடிஓ முபாரக் அலி, திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் அப்பகுதி மக்களை சந்தித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் கூறினர். இருந்தும் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.