Skip to main content

ஃபேஸ்புக் மூலம் நிதி திரட்டி காவலர் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக பணிபுரிந்து வருபவர் மனோகரன். இவரது மனைவி மேரி எமரென்சியா, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். அதில் மகன் மணிஷ் பால், 12ஆம் வகுப்பு படித்து வருகிறான். மகள் சிமோனா ஆன்டோனி ரோஸ் பீட்டர் 11ஆம் வகுப்பு படித்து வருகிறாள்.

 

police - facebook

 



இந்நிலையில் 04.02. 2020 அன்று இரவு பணியில் இருந்த மனோகரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலிப்பதாக இரவு பணியில் இருந்த சககாவலரான ஞானமூர்த்தி என்பவரிடம் தெரிவித்துள்ளார், உடனே ஞானமூர்த்தி அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும் மேல் சிகிச்சைக்கு பாண்டிச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர். 

இத்தகவல் முதுநகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆகாச மூர்த்தி என்பவருக்கு  தெரிவிக்கப்பட்டு,  மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மனோகரனுக்கு ஆஞ்சியோ செய்ய வேண்டும் என கூறினர். அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ செய்யப்பட்டது, பின்பு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மற்றொரு ரத்த குழாயில் அடைப்பு உள்ளதாக தெரிவித்தனர். 

 



அதனை சரிசெய்ய ரூபாய் ஒன்றரை லட்சம் ஆகும் எனவும் கூறினர். இவ்வளவு தொகையினை அவரின் மனைவியினால் உடனடியாக தயார் செய்ய முடியவில்லை. இத்தகவல் கடலூர் உட்கோட்ட  துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி, கடலூர் முதுநகர் ஆய்வாளர் பால் சுதருக்கு தெரிவிக்கப்பட்டது. 

அவர்களின் அறிவுரையின்படி காவலர்கள் தங்களால் முடிந்த உதவியினை செய்யுமாறு ஃபேஸ்புக்கில் வங்கி கணக்கு எண்ணுடன் பதிவு இடப்பட்டது. இதனைப் பார்த்த காவலர்கள் தங்களால் முடிந்த உதவியினை பணமாக நேரிலும், வங்கி கணக்கிலும் செலுத்தினர். மருத்துவ செலவுக்கு தேவையான தொகையினை  துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று மனோகரனின் மனைவியிடம் கொடுத்து அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். தற்பொழுது மனோகரன் மருத்துவ சிகிச்சை முடித்து நல்ல நிலைமையில் உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.