Published on 01/03/2022 | Edited on 01/03/2022
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று தனது 69ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, இன்று காலை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்கு வருகை தந்த ஸ்டாலின் இருவரது நினைவிடங்களிலும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளைக் கொண்டாடும் பொருட்டு கழக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்துத் தெரித்தார். அந்த தொலைபேசி அழைப்பில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் மோடியிடம், தங்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து பணியாற்றுவேன் என ஸ்டாலின் உறுதியளித்தார்.