Skip to main content

 பஞ்சாப் நேசனல் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம்

Published on 26/02/2018 | Edited on 26/02/2018

 

சென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை திருவல்லிக்கேனியில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கி முன்பு நடைபெற்றது. பஞ்சாப் நேசனல் வங்கியில் 11ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் பெற்று வெளிநாட்டிற்கு தப்பி சென்ற நீராவ்  மோடிக்கு உடந்தையாக உள்ள மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் மாநில பொது செயலாளர் ஹரிகிருஸ்னன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

சென்னை கிழக்கு காங்கிரஸ் கமிட்டி  மாவட்ட தலைவர் சிவராஜசேகரன், கிழக்கு மாவட்ட  இளைஞர் காங்கிரஸ் தலைவர் சாதிக்,கலை பிரிவு மாவட்ட தலைவர் ஜி பிரபு, தென்சென்னை காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் ரவிராஜ், கடல் தமிழ்வாணன், எஸ் கந்தன், உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர் பின்னர் பஞ்சாபி நேசனல் வங்கியை முற்றுகை இட முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

சார்ந்த செய்திகள்