Skip to main content

 புதிதாக தொடங்கப்பட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி தமிழ்நாடு அமைப்பு!

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

Newly launched United Farmers Front Tamil Nadu Organization!

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டத்திற்கு எதிராகப் பல மாதங்களாக டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி என்ற தமிழ்நாடு அமைப்பு செப்டம்பர் 21- ஆம் தேதி அன்று ஈரோட்டு மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. 

 

கடந்த மாதம் 26- ஆம் தேதி அன்று டெல்லி சிங்கு எல்லையில் நடைபெற்ற மாநாட்டில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் கிளைகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் உருவாக்குவது என விவசாய அமைப்புகள் முடிவெடுத்தது. அதன் தொடர்ச்சியாக,  ஈரோடு பெரியார் மன்றத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட மாநாடு  நடைபெற்றது. இந்த மாநாட்டின் மூலம் புதிதாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி தமிழ்நாடு அமைப்பு உருவாக்கப்பட்டது. வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய அளவில் வருகின்ற செப்டம்பர் 27- ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

 

இதற்கு ஆதரவாகத் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளராக சி.பி.எம். கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

அவர் கூறுகையில், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளை வழி நடத்தும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் வேண்டுகோள் படி தமிழ்நாட்டிலும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி தமிழ்நாடு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 64 விவசாய அமைப்புகள் சேர்ந்துள்ளன. செப்டம்பர் 27- ஆம் தேதி அன்று நாடு தழுவிய போராட்டத்திற்குத் தமிழ்நாடு அமைப்பு முழு ஒத்துழைப்பு தர இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட உள்ளோம். 

 

மத்திய அரசு வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை டெல்லியில் மட்டுமல்ல, இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மிகப்பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெறும். உத்தரபிரேதசம் மற்றும் உத்தரகண்ட்டில் நடைபெறவுள்ள தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைய வேண்டும் என்பதை அம்மாநில மக்களிடையே வலியுறுத்த உள்ளோம். கார்ப்பரேட்களின் ஆதரவாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் விவசாயிகளுக்கு எதிராக உள்ள மத்திய பாரதிய ஜனதா கட்சியும் வேளாண் சட்டங்கள் குறித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி  அமைப்போடு விவாதிக்கத் தயாரா?" என்று கேள்வி எழுப்பினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.