Skip to main content

எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் உள்பட 2 பேர் கைது!

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிமுன் அன்சாரி பெயரைப் பயன்படுத்தி அவர் நலத்திட்டமாக 31 பேருக்கு ஸ்கூட்டி வழங்க உள்ளதாக அட்டை அச்சடித்து கிராமங்களில் கொடுத்து ரூபாய் 5 ஆயிரம் வரை வசூலில் ஈடுபட்ட தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றிய அ.தி.மு.க சிறுபான்மைப் பிரிவு ஒன்றியச் செயலாளர் ஆவணம் கனி உள்பட இருவரை பொதுமக்களே பிடித்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

NAGAI DISTRICT TAMIMUN ANSARI MLA NAME MISS USED POLICE ARRESTED

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் சிவன் மோட்டார்ஸ் என்ற பெயரில் ஹீரோ ஷோரூமுக்கு பேராவூரணி வட்டம் ஆவணம் கிராமத்தில் இருந்து தொடர்பு கொண்ட ஒருவர் மார்ச் 5- ஆம் தேதி நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி இலவசமாக ஸ்கூட்டி வழங்குகிறாரா? அந்த வண்டிகள் உங்கள் நிறுவனத்தில் இருந்து வழங்கப்படுகிறதா? என்று கேட்டுள்ளார். ஷோரூமில் இருந்து பேசியவர்கள் அப்படி ஏதும் இல்லை என்று சொன்னதுடன் கூடுதல் விளக்கம் கேட்க இருவர் டோக்கன் கொடுத்து பணம் வசூல் செய்கிறார்கள் என்று போனில் தொடர்பு கொண்ட நபர் கூறியுள்ளார்.

NAGAI DISTRICT TAMIMUN ANSARI MLA NAME MISS USED POLICE ARRESTED

அதன் பிறகு மோசடியில் ஈடுபட்டு வந்த நபரை ஷோரூமில் இருந்து தொடர்பு கொண்டு தங்களுக்கு பைக் வேண்டும் என்று கேட்க ரூ. 5 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர். பணத்துடன் இருப்பதாகக் கூறி அவர்களை கீரமங்கலம் வரவைத்து பிடித்து கீரமங்கலம் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

NAGAI DISTRICT TAMIMUN ANSARI MLA NAME MISS USED POLICE ARRESTED

இது குறித்து ஷோரூம் நிர்வாகிகள் கூறும் போது, "ஆவணத்தில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டு கேட்டதும் மோசடி நடப்பதை அறிந்து சம்மந்தப்பட்டவர்களை பின் தொடர்ந்தோம். எங்களுக்கு வண்டி வேண்டும் என்று பொறி வைத்து பிடித்தோம். அ.தி.மு.க சிறுபான்மைப் பிரிவு ஒன்றியச் செயலாளர் கனியின் பைக்கில் இருந்த பையில் 50- க்கும் மேற்பட்ட டோக்கன்கள், ஒரு நோட்டில் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களைச் சோ்ந்த பலரிடம் ஆதார் நகல் வாங்கி வைத்திருந்தனர். விசாரித்த போது விடுதி சந்திரன் என்பவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாகக் கூறினார்கள். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.