இதைத்தொடர்ந்து மாவட்ட தடயவியல்துறை டிஎஸ்பி ஆனந்தியும் அங்கே வரவழைக்கப்பட்டார். தலையை கைப்பற்றிய போலீசார் அதன் உடலை தேடிவருகின்றனர். அக்கம் பக்கம் உடல் காணப்படாததால் எங்கேயோ வைத்து கொலைசெய்து பின் தலையை வெட்டி எடுத்து இங்கே கொண்டுவந்து வைத்திருக்கலாம் என போலீஸ் தரப்பு சோர்ஸுகள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சகாயசாந்தி விசாரணையில் ஈடுபட்டுள்ளார். மேலும் போலீசார் இதுபற்றி விசாரணையில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய விசாரணையில் கொலைசெய்யப்பட்டவர் ராஜவல்லிபுரத்தினை சேர்ந்த மாரிமுத்து நாடார் மகன் பல்துறை(25) என்பது தெரியவந்தது. பால்துறை வேலையின்றி விடலையாக அழைபவராம். அதோடு அந்த பகுதியிலுள்ள இரண்டு மூன்று பேருடன் சேர்ந்து கஞ்சா அடிக்கும் பழக்கமும் கொண்டவராம்.இதனால் இந்த கொலை கஞ்சா தொடர்பாக நடந்த கொலையா? அல்லது வேறு எதுவும் காரணமாக என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்று போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
தலையை அறுத்து வீசிய இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை கிளப்பியிருக்கிறது. மேலும் உடல் இப்போதைய நிமிடம் வரை கிடைக்காமல் இருப்பது பரபரப்பை கூடியுள்ளது.