Skip to main content

அய்யோ..!! தப்புப் பண்ணிட்டேனே... அந்தம்மாவுக்கு மூனுமே பொண்ணுங்கனு இப்பத்தானே தெரியுது... அழுது அரற்றிய கார்த்திகேயன்!

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

அந்தம்மாவை நோக்கி கொலை செய்ய பாயும் போது ''எனக்கு மூனு புள்ளைக விட்டுடு''ன்னு கதறுனாங்க ஆனால், ஏதோ வேகத்துல அந்தம்மாவையும் கொன்னுட்டேன். கடைசியாத்தான் தெரியுது மாரியம்மாளுக்கு அத்தனையும் பெண் புள்ளைங்கன்னு.. அய்யோ தப்புப் பண்ணிட்டேனே என அழுது அரற்றி புலம்பி இருக்கின்றான் முன்னாள் மேயர் உட்பட மூவர் கொலையின் சூத்ரதாரியான கார்த்திகேயன்.

 

KARTHIKEYAN

 

கடந்த 23ந் தேதி நண்பகலில் நெல்லை ரெட்டியாப்பட்டியில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் உட்பட மூவரையும் கொலை செய்த கார்த்திகேயேனை கைது செய்து ரிமாண்டிற்கு அனுப்பியது நெல்லைக் காவல்துறை. முன்னாள் மேயரும், அவரது கணவரும் கொல்லப்பட்டதற்கு கொடுக்கல் வாங்கல் மற்றும் முன்விரோதம்தான் என காரணம் கற்பிக்கப்பட்டாலும், எந்த விவகாரமும் அறியாத வேலைக்காரப்பெண் கொலை செய்யப்பட்டது பலத்த கோபத்தை உண்டாக்கியது பொதுமக்களிடமிருந்து. வழக்கின் வேகம் சூடுபிடித்து கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், " சார் எம் புள்ளையை அவன் ஏன் கொன்னான்னு நிக்க வைச்சு கேள்விக் கேட்கனும் அப்பத் தான் எங்க மனசு ஆறும். அதுக்கு ஏற்பாடு செய்யுங்களேன்" என கொலையுண்ட பணிப்பெண் மாரியம்மாள் தரப்பிலிருந்து நெல்லை காவல்துறைக்கு கோரிக்கைகள் வந்தது.

 

KARTHIKEYAN

 

செவ்வாய்க்கிழமையன்று கார்த்திகேயனிடமிருந்து வாக்குமூலம் பெற்ற காவல்துறை தனிப்படையினர், வாக்குமூலத்திற்கு பின்னர் கொலை நடந்த முன்னாள் மேயர் வீடு, கக்கன் நகர் பகுதி ஆகிய இடங்களுக்கு கார்த்திகேயனை அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதன் பின்னர் நீதிபதியிடம் ஆஜர்படுத்துமுன், மாரியம்மாள் உறவினர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்க மேலப்பாளையம் காவல்நிலையத்திற்கு அவனை அழைத்து சென்ற காவல்துறை முன்னதாக கொலையுண்ட பணிப்பெண் மாரியம்மாளின் குழந்தைகள் வீரலெட்சுமி, ஜோதிலெட்சுமி, ராஜேஸ்வரி, அம்மா வசந்தா, அண்னன் குமார் மற்றும் உறவினர் கோலம்மாள் உட்பட அனைவரையும் வரவழைத்து அங்கேயே மறைவாய் காத்திருக்க வைத்திருந்தது.

 

KARTHIKEYAN

 

"உனக்கும் மேயருக்கும் தானே பிரச்சனை அப்புறம் ஏன் அந்த வேலைக்காரப் பெண்ணை கொன்றாய்?" எனக் கேட்டதற்கு,  " சத்தியமாக அந்தம்மாவை கொலை செய்யுற எண்ணமே இல்லை. கதவை திறந்து வந்த அவளுக்கு ரெண்டு பேர் ரத்த வெள்ளத்தில் கிடப்பது தெரிந்ததைக் கண்டதும் அழுது கத்தத் தொடங்கினார். ஓடிப் போயிடு ஓடிப் போயிடுன்னு கோபமாய் கத்தியும் மாரியம்மாள் கிளம்பலை. வேற வழியில்லாமல், வெளியில் கத்திக் கூப்பாடுப் போட்டு நம்மளை மாட்டிவிட்டுடுவாளோ எனும் பயத்தில் அந்தம்மாவையும் இழுத்து தாக்கி குத்த வேண்டியாதாச்சு. அப்பக் கூட அந்தம்மா, " எனக்கு மூனு புள்ளைக இருக்கு விட்டுடுன்னுச்சு." புத்திக் கேட்கலை, அது ஆம்பளை புள்ளைகளாக இருக்கும் பிழைச்சுக்கும்னு குத்திக் கொன்னுட்டேன். பிறகுதான் தெரிஞ்சது அந்தம்மாவுக்கு அத்தனையும் பெண் புள்ளைகன்னு, அது தப்பு தாங்க" எனக் கூறியபடி முகத்தைப் பொத்தி அழுக ஆரம்பிச்சுட்டான்.

 

திரைமறைவில் இதனைப் பார்த்துக் கொண்டிருந்த மாரியம்மாள் குடும்பத்தினருக்கு நடந்தது என்ன என்ற திருப்தி ஏற்பட்டாலும் அவர்களும் அழுததுதான் வேதனையே என்கிறார் தனிப்படை அதிகாரி ஒருவர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.