Skip to main content

முன்னாள் திமுக பெண் மேயர் படுகொலை... பதற்றத்தில் நெல்லை (படங்கள்)

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

நெல்லை அரசு பொறியியல் கல்லூரி அருகே பட்டப்பகலில் வீட்டில் இருந்த திமுக முன்னாள் மேயர், அவரது கணவர், வீட்டு பணி பெண் ஆகிய 3 பேரை மா்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிடடனர். நகைக்காக கொலை நடந்ததா, அல்லது சொத்து தகராறில் கொலை நடந்ததாக என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லை மாநகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி. இவர் தனது கணவர் முருகன்சங்கரனுடன் நெல்லை அரசு பொறியியல் கல்லூரி அருகே உள்ள ரோஸ் நகரில் வசித்து வந்தார். முருகன்சங்கரன் நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் பிரியா என்ற மகள் திருச்சியில் குடும்பத்துடன் உள்ளார், அடுத்த மகள் கார்த்திகா பொற்றோர்களின் வீட்டின் அருகிலேயே உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவா் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில் இன்று பிற்பகலில் உமாகேஸ்வரி, அவரது கணவர் முருகன்சங்கரன் மற்றும் வீட்டு பணி பெண் மாரி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மூன்று பேரையும் கத்தியால் குத்தி விட்டு உமாமகேஸ்வரி தப்பியோடிவிட்டனர். மூன்று பேரும் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

அக்கம் பக்கத்தில் வீடுகள் எதுவும் இல்லாததால் கொலை நடந்த தகவல் பல மணி நேரம் வெளியில் தெரியவில்லை. மாலையில் அவர்களது மகள் கார்த்திகாக கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது கொலை சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்ததும் மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் அா்ஜுன்சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது, தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை பதிவு செய்து கொண்டனர். மேலும் மூன்று பேரின் உடலையும் போலீசார் கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கொலை சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவரது வீட்டு முன்பு தி.மு.க.வினர், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

 


கொலை சம்பவம் குறித்து மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதற்கட்ட விசாரணையில் கொலையான உமாமகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த செயின், கையில் அணிந்திருந்த வளையல்கள் காணாமல் போய் உள்ளது எனவே ஆதாயத்திற்காக நடந்த கொலையாக இருக்காலம் என சந்தேகிக்கிறோம். கொலையாளிகளை பிடிப்பதற்கு காவல்துறை உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடிஅருணா அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி இரங்களைத் தெரிவித்த அவர் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி  கழகத்திற்கு பேரிழப்பு என்று கூறினார். கொலைச்சம்பவம் குறித்து   மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைக்காக கொலை நடந்ததா அல்லது சொத்து தகராறில் கொலை செய்யப்பட்டார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையான உமாமகேஸ்வரி நெல்லை மாநகரத்தின் முதல் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.