இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள தோப்பூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தான் கூறிய கருத்து சரித்திர உண்மை என கமல் கூறியிருந்தார்.
அதேபோல் நேற்று இரவு திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபம் அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் வந்த சிறிது நேரத்திலேயே பாஜகவை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர்.
குவிந்த அந்த இளைஞர்கள் கமலஹாசன் மீது காலணிகளை வீசி எறிந்தனர். அந்த இளைஞர்களை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சற்று பதற்றம் நிலவியது.
இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முக்கிய நிர்வாகியான இல.கணேசன் , வரலாறு தெரியாமல் பேசும் கமல் திருந்துவாரா என தெரியவில்லை. அவரக்குறிச்சியில் அதிக வாக்குகளை பெறுவதற்காக இதுபோன்று பேசிவருகிறார் எனத் தெரிவித்தார்.
அதேபோல் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமானுஜ ஜீயர், கமலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளது எனவே கமஹாசனை கைது செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.