Skip to main content

சாராய குடும்பத்தை பிடித்து தந்த கிராம மக்கள்!

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
javadhu malai 01


வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் பரந்துவிரிந்துள்ள ஜவ்வாதுமலை தொடரில் கள்ளச்சாராயம் மிக பிரபலம். மலை முழுவதும் வனத்துறை மற்றும் கலால் துறையால் ரெய்டு செய்து தடுக்க முடியாத நிலையால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாமல் தடுமாறுகிறது இந்த இரண்டு மாவட்ட காவல்துறை. 
 

அதனால், மலை கிராம மக்களிடையே கள்ளச்சாராயம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் போலிஸார். இந்த விழிப்புணர்வு பணியில் சமூக அமைப்புகளும் ஈடுப்பட்டுள்ளன. இதனால் கள்ளச்சாராயம் என்பது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படி கட்டுக்குள் வந்த பகுதிகளிலும் தமிழக ஆளும் அதிமுக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து இது நல்லச்சாராயம் என விற்பனை செய்வது தனிக்கதை. இந்நிலையில் எச்சரிக்கையை மீறி தொடர்ச்சியாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த குடும்பத்தை காவல்துறையிடம் பிடித்து தந்துள்ளார்கள் மலைகிராம மக்கள்.
 

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில் பல வருடங்களாக கள்ளச்சாராயம் விற்று வந்தனர் சரோஜா மற்றும் குழந்தை இருவர். இதுப்பற்றி காவல்துறைக்கு தகவல் தந்தால் வந்து பிடித்து செல்வர், பெயருக்கு வழக்கு பதிவு செய்துவிட்டு வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு எச்சரித்துவிட்டு விடுவார்கள். இதுதான் வாடிக்கையாக இருந்துவந்தது.


 

javadhu malai 01


இந்நிலையில் வெளியூர்களில் இருந்து சாராயம் குடிக்க இந்த கிராமத்துக்கு இளைஞர்கள், ஆண்கள் வருவதால் அக்கிராம மக்கள் கோபத்தில் இருந்தனர். இதற்கு முடிவுக்கட்ட பிப்ரவரி 11ந் தேதி கிராம மக்கள் ஒன்றிணைந்து, சரோஜா வீட்டுக்குள் புகுந்து அங்கு வைத்திருந்த சாராய கேன்கள், லாரி டியூப்களில் அடைத்து வைக்கப்பட்டுயிருந்த சாராயத்தை எடுத்துவந்து வீட்டுக்கு வெளியே வைத்துவிட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மக்கள் பிடித்த சுமார் ஆயிரம் லிட்டருக்கு மேலிருந்த இந்த சாராயத்தின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்தை தாண்டும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். 
 

ஆம்பூர் தாலுக்கா போலிஸார் உடனடியாக நாயக்கநேரி கிராமத்துக்கு சென்றனர். மக்கள் பிடித்து தந்த சாராயத்தையும், சாராயம் விற்பவர்களையும் கைது செய்துக்கொண்டு காவல்நிலையம் வந்தனர். அவர்களிடம் இன்னும் எங்காவது சாராயம் பதுக்கி வைத்துள்ளார்களா?, சாராயம் காய்ச்சி தங்களுக்கு விற்பனை செய்வது யார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மண்ணுக்குள் கள்ளச்சாராயம்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.