Skip to main content

“முதல்வரே தனது வாயால் சொன்னால்தான் அதற்கு மதிப்பு” - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

 It is worth it because the Chief Minister said it with his own mouth"- Minister KKSSR Ramachandran interviewed.

 

மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில், “நம்முடைய முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். அதில் மிகவும் முக்கியமான அறிவிப்பு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி. அது நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் நேற்றைக்கும் இன்றைக்கும் 33 கோடி அளவிற்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து நமது மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை நானும் மாவட்ட ஆட்சித் தலைவரும் அக்கறை எடுத்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் மட்டும் 4 கோடியே 69 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புதியதாக ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் கடன் வழங்குகிறோம். இதெல்லாம் நம்முடைய முதல்வர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள். இன்னும் நிறைவேற்றக்கூடிய திட்டமாக இருக்கக் கூடிய மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கின்ற திட்டத்தை விரைவில் நமது முதல்வர் அறிவிக்க இருக்கிறார். அது எந்த தேதி, எந்த மாதம் என்பது அவருடைய வாயிலிருந்து வந்தால்தான் அந்த அறிவிப்புக்கு மரியாதை இருக்கும். ராஜபாளையம் மேம்பாலப் பணி இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை மாதத்திற்குள் முடிந்து விடும்'' என்றார்.

 

'பாஜக அண்ணாமலை திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறாரே' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு. ''அண்ணாமலைக்கு வேறு என்ன வேலை இருக்கிறது. விமர்சிப்பது மட்டும்தான் அவரது வேலை. எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் ஆளுங்கட்சியை விமர்சிப்பார்கள்'' என்றார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர், ‘பாஜகவில் அண்ணாமலை வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்' என கேள்வி எழுப்ப... சிரித்துக்கொண்டே எழுந்து சென்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.