Skip to main content

தேர்தல் வந்தால் பாஜகவுடன், அதிமுக கூட்டணி வைத்து தான் போட்டியிட வேண்டிய நிலை உள்ளது: சீமான்

Published on 10/09/2017 | Edited on 10/09/2017
தேர்தல் வந்தால் பாஜகவுடன், அதிமுக கூட்டணி வைத்து தான் போட்டியிட வேண்டிய நிலை உள்ளது: சீமான்

தேர்தல் வந்தால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து தான் போட்டியிட வேண்டிய நிலை உள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் சந்தித்த அவர் கூறியதாவது,

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராக உள்ளன. சட்டப்பேரவைத தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். தேர்தல் வந்தால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து தான் போட்டியிட வேண்டிய நிலை உள்ளது. வாக்குகளை விற்கும் சந்தையாக தேர்தல் மாறிவிட்டது. நிலையான ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்