ADVERTISEMENT
ADVERTISEMENT
திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் பயன்படுத்தப்பட்டு வந்த 13 இருசக்கர வாகனங்கள், ஒரு டெம்போ டிராவலர், 2 ஜீப்புகள் ஆகியவை பொது ஏலத்தில் இன்று விடப்பட்டது. இந்த ஏலம் திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் பொது ஏலத்தில் மொத்தம் 16 வாகனங்கள் இருந்தன. அதன் மொத்த ஏலத் தொகையாக அரசுக்கு ரூ. 3,39,080 வந்தது. அதனை காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் அரசு கணக்கில் செலுத்தினார்.
Show comments