Skip to main content

திமுக பிரமுகர் கொலை - 4 பேர் கைது!

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

sdf

 

சென்னையில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

சென்னை காந்தி நகர் பல்லவன் சாலையில் நேற்று இரவு திமுக நிர்வாகி மதன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேர்தலில் தீவிரமாக பணியாற்றி அவர், படுகொலை செய்யப்பட்டது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தேர்தல் தொடர்பாக அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், குடும்ப தகராறு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு நபர்களை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்