Skip to main content

சிதம்பரம் ரயில் நிலையத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க ரூ 1 லட்சத்தில் கண்காணிப்பு கேமரா!

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

சிதம்பரம் ரயில் நிலையத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக ரூ 1 லட்சத்தில் கண்காணிப்பு கேமரா பொதுமக்கள் பங்களிப்புடன் நிறுவப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் நிலையம் முக்கிய ரயில் நிலையமாகும் சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் ஆலயம். அண்ணாமலை பல்கலைகழகம் உள்ளது.  இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிதம்பரம் நகருக்கு ஆன்மீக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் ரயில்கள் மூலம்  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கிறார்கள்.  ரயில் நிலையங்களில் ரயில்கள் வரும்போது சரியான விழிப்புணர்வு இல்லாததால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகிறது. மற்றும் குற்ற சம்பவங்களும் நடைபெற்று வந்தது. மேலும் பயணிகளிடம் திருநங்கைகள் தொந்தரவுகள் என பல்வேறு முகம் சுளிக்கும் சம்பவங்கள் நடைபெறுவதாக ரயில் பயணிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

 

 surveillance camera  in Chidambaram railway station

 

இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புவனகிரி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய அம்பேத்கார் சிதம்பரம் இருப்புபாதை காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக பணி மாற்றப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவர் ரயில் நிலையத்தில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்களை கணக்கில் கொண்டு சிதம்பரம் ரயில் நிலைய மேலாளர் கனகராஜிடன் இணைந்து பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ1 லட்சத்தில் 18 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளார்கள்.

 

 surveillance camera  in Chidambaram railway station

 

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பொறுப்பேற்று வந்த சில நாட்களில் ரயில்கள் வரும்போது பலர் வண்டியில் இறங்கும்போதும் ஏறும்போதும் சரியான விழிப்புணர்வு இல்லாததால் விழுந்து விடுகிறார்கள் மேலும் ரயில் நிலையத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு பொதுமக்கள் ஆதரவுடன் இந்த கண்காணிப்பு கேமராவை பொருத்தி உள்ளோம். இதனை வரும் நவம்பர் 30-ஆம் தேதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள கவர்னர் வருகை தருகிறார். அப்போது ரயில்வே உயரதிகாரிகள் மற்றும் ரயில்வே இருப்புப்பாதை காவல் பணியின் உயரதிகாரிகள் இங்கு வருவார்கள். அவர்களை கொண்டு இந்த கண்காணிப்பு கேமராவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கவுள்ளதாக கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.