Skip to main content

தீபாவளி வாழ்த்து கூறிய முன்னாள் அமைச்சர் போஸ்டர் கிழிப்பு!

Published on 07/11/2018 | Edited on 07/11/2018
po

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அதிமுகவில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் ஒரு கோஷ்டியாகவும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் மற்றொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். 


          இந்த நிலையில் தான் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் ஆதரவாளர்களான பழனியை சேர்ந்த ராஜாமுகமது மற்றும் சதீஸ்குமார்  ஆகியோர் தீபாவளி வாழ்த்து கூறி பழனி நகரில் உள்ள பல இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்து இருந்தனர்.

 

p

 

 அந்த பேனர்களில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் படம் போடவில்லை.  அதைகண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் சீனிவாசன்மகன்  ராஜ்மோகன் மற்றும்  ஆதரவாளர்களும் தீபாவளிக்காக திண்டுக்கல் மாநகரில் வைக்கப்பட்ட தீபாவளி வாழ்த்து பிளக்ஸ் பேனர்களில் முன்னாள்  முப்பெரும் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் படம் மற்றும் அவருடைய மச்சான் படம்  போடாமல்  அங்கங்கே வைத்து .


    இதைக் கண்டு லோக்கலில் உள்ள விஸ்வநாதன் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் மட்டுமல்லாமல் அந்த பிளக்ஸ் பேனருக்கு போட்டியாக நகரம், ஒன்றிய  அதிமுக 
சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து போஸ்டர்கள்  இரண்டு மாடல்களில் விஸ்வநாதன் ஆதரவாளர்களான நெப்போலியன் மற்றும் திருமாறன் தலைமையிலான ர.ர.க்கள் அடித்து மாநகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் ஒட்டி இருக்கிறார்கள்.

 

  இப்படி அடிக்கப்பட்ட தீபாவளி  வாழ்த்து போஸ்டர்களில் அமைச்சர் சீனிவாசன் படம் போடவில்லை. அதைகண்டு சீனி ஆதரவாளர்கள் டென்ஷன் அடைந்து விட்டனர்.  
  இந்த நிலையில் தான்  இப்படி விஸ்வநாதன் ஆதரவாளர்களால்  ஒட்டப்பட்ட தீபாவளி வாழ்த்து போஸ்டர்கள் நகரில் சில இடங்களில்  கிழித்து போட்டு இருப்பதை கண்டு விச்சு ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

 

p


     இப்படிப்  பட்ட கீழ் தரமான வேலைகளை எல்லாம் அமைச்சர் சீனிவாசன் ஆதரவாளர்கள் தான் செய்து இருப்பார்கள் என்று தெரிகிறது.  எங்க முன்னாள்  அமைச்சர்  அண்ணன் விஸ்வநாதன் அம்மா மூலம்  தான் கட்சிக்கு வந்தாரே தவிர சீனிவாசன்  எல்லாம் கட்சிக்கு கொண்டு வர வில்லை.  அதனால் தான்  அம்மா முப்பெரும் துறையை கொடுத்தார்.  அதன் மூலம்  மாவட்டத்தில் கட்சியை வளர்த்து கொண்டு  கட்சிக்காரர்களுக்கும் கட்சிகாரர்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் நிவர்த்தி செய்து தன்னால் முடிந்த பண உதவிகளையும் செய்து வந்தார்.

 

   அந்த நன்றி விஸ்வாசத்திற்காகத் தான்  கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் அண்ணன் விஸ்வநாதன் படம் போட்டு தீபாவளி வாழ்த்து போஸ்டர்கள் அடித்து . அது பொறுக்க முடியாமல் தான் சீனி ஆதரவாளர்கள்  அந்த போஸ்டர்களை கிழித்து விட்டனர் என்று கூறினார்கள்.


  ஆனா‌ல் அமைச்சர்  சீனிவாசன் ஆதரவாளர்களோ நாங்க அந்த போஸ்டர்களை எல்லாம்  கிழிக்க வில்லை.  அப்படி பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள் என்று கூறினார்கள். இருந்தாலும் இச் சம்பவம் திண்டுக்கல் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“இதற்கு பா.ஜ.க வெட்கப்பட வேண்டும்” - ஜெயக்குமார் ஆவேசம்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Jeyakumar raves on BJP should be ashamed of this

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வந்திருந்த பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

அந்த வகையில் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “கடந்த 1991இல் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடையில் காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றினோம். நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது” என்று பேசினார். 

இதற்கிடையே, பா.ஜ.க லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுடன் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி அ.திமு.கவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பா.ஜ.கவினரின் செயலுக்கு புதுச்சேரி அ.தி.மு.க பிரிவு சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பா.ஜ.க பயன்படுத்த வெட்கப்பட வேண்டும். எதற்காக இப்படி எங்கள் தலைவர்கள் படங்களை பயன்படுத்துகிறீர்கள்?. அதிமுக தலைவர்களை முன்னிலைப்படுத்தி, பா.ஜ.க வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது. தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்று இதன்மூலம் தெரிகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முகங்களைக் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது. அந்த இரண்டு முகங்களும் அதிமுகவுக்கு மட்டுமே சொந்தமானது” என்று கூறினார்.