Skip to main content

ஒரு நாள் மழையில் நிரம்பிய அணை... ஒரு டி.எம்.சி. தண்ணீர் வீண்!!!

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

கரோனா வைரஸ் பீதி ஒருபுறம் தொடர்ந்து கொண்டே இருக்க, ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஆனால் இயற்கை மட்டும் அதன் செயல்பாட்டை நிறுத்தவில்லை. நேற்று தமிழகம் முழுக்க பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

 

 A dam filled with rain in a day ...


அப்படித்தான், ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகளின் சில இடங்களில் கனமழை பெய்தது. கடம்பூர் மலையிலுள்ள மல்லியம்மன் துர்க்கம், விளாங்கோம்பை, கம்பனூர், குன்றி ஆகிய மலைப்பகுதிகளில் கனமழை பெய்ததால் காட்டாற்று வெள்ளம் மலையிலிருந்து கீழ் பகுதியை நோக்கி ஓடிவந்தது அப்படி வந்த நீர் தூக்கநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் அமைந்துள்ள குண்டேரிபள்ளம் அணையை நோக்கி வந்தது. இந்த அணையில் சில அடி நீர்தான் முன்பு இருந்தது. ஆனால் ஒருநாள் ஒரு நாள் மழையில் வந்த நீர் அந்த அணையின் 42 அடி முழு கொள்ளளவையும் நிரப்பி, உபரி நீராக வெளியேற தொடங்கியது.
 

nakkheeran app



குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து உபரி நீராக 500 கன அடி நீர் நேற்று இரவிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் அந்த அணை பகுதியில் உள்ள கிராமங்களான கொங்கார்பாளையம், வாணிபுதூர், கள்ளியங்காடு, வினோபா நகர், தோப்பூர் உள்ளிட்ட பத்து கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும், கால்நடைகளை ஆற்றங்கரையோரம் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்றும், மீன் பிடிக்கவும் ஆற்றில் இறங்க கூடாது என்றும் தடை விதித்து உள்ளார்கள்.

இந்த குண்டேரிபள்ளம் அணையில் அவ்வப்போது நீர் நிரம்பி வெளியேறி, அது பவானி ஆற்றில் வீணாக கலக்கிறது. இங்கு கடந்த பத்து வருடங்களாகவே மூன்று தடுப்பணைகள் கட்டி அதன் மூலம் நீரை சேமித்து வைத்தால் நூற்றுக்கணக்கான கிராமங்களில் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படும் என விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் அந்த தடுப்பணைகள் கட்டப்படவேயில்லை அதனால் இப்போதும் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் மொத்தமும் வீணாக பவானி ஆற்றில் கலக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.