Skip to main content

மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு விவரம் வெளியீடு!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020
j

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம் அமலில் உள்ளது.

 

bn

 

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 4,280 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,842 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 1,07,001 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 36,164 கரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 13,06,884 ஆக உள்ளது. 

 

jkl

 

கரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 1,450 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து இன்று மட்டும் 2,214 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 60,592 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 44,956 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்