Skip to main content

சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர்கள் இருவருக்கு கரோனா உறுதி!

Published on 28/07/2020 | Edited on 28/07/2020
df

 

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த மாதம் 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக்கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்து சென்றனர். 

 

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாக சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாக கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ, குற்றச்சாட்டுக்குள்ளான காவலர்களை கைது செய்து விசாரித்து வருகின்றது. இந்த விசாரணை அதிகாரிகளில் ஐந்து பேருக்கு கரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறையில் உள்ள காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

 

 

சார்ந்த செய்திகள்