Skip to main content

“என் மெடலை பார்க்க நீ இல்லையே அப்பா” - தந்தையின் கல்லறையில் கதறி அழுத தங்கமங்கை

Published on 06/12/2022 | Edited on 06/12/2022

 

Tribute Commonwealth gold medalist Lokapriya late father grave

 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நியூசிலாந்து நாட்டில் ஆக்லாண்ட் நகரில் நடைபெற்றது. இதில் பளுதூக்கும் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா உட்பட 13 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவால் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாததால் மற்ற 12 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கச் சென்றனர். தமிழக அரசு சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார். நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கிய போட்டிகள் டிசம்பர் 4 வரை நடந்து முடிந்தது. இதில் 12 பேரில் 11 வீரர், வீராங்கனைகள் மெடல் அடித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். 

 

இவர்களுள் தஞ்சை மாவட்டத்திலிருந்து சென்ற இருவரில் மாஸ்டர் பிரிவில் 490 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கம் பெற்றார் பயிற்சியாளரான பட்டுக்கோட்டை ஜிம் ரவி. இவரிடம் பயிற்சி பெற்ற எம்.பி.ஏ முதுகலை பட்டதாரியான லோகப்பிரியா (வயது 22) 52 கிலோ எடைப் பிரிவில் 350 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

 

Tribute Commonwealth gold medalist Lokapriya late father grave

 

இந்த மகிழ்ச்சி 5 நிமிடம் கூட நீடிக்கவில்லை. லோகப்பிரியா வெற்றிக்கனி பறிக்கும் வரை காத்திருந்து அனைவரது பாராட்டையும் பெற்று தேசியக் கொடியோடு மெடல் வாங்கிக் கொண்டு கீழே இறங்கும் போது அவரிடம் சொன்ன தகவல் அப்படியே நொறுங்கிப் போக வைத்தது. உன் தந்தை காமன்வெல்த் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக உன் சித்தப்பா தகவல் சொல்கிறார் என்றதும் வெற்றியின் மகிழ்ச்சியைக் கொண்டாட நினைத்த வீராங்கனை தந்தையை இழந்த துக்கத்தில் நிலைகுலைந்து போனார். இந்த சாதனையை பார்க்க தானே இத்தனை காலம் உழைத்தார். என் மெடலை அவரிடம் காட்ட வேண்டும் என்று நினைக்கும் போது அவர் இல்லையே எனக் கதறி அழுதுள்ளார்.  அருகில் இருந்த சக பயிற்சியாளர்களும் வீரர், வீராங்கனைகளும் ஆறுதல் கூறி தேற்றியுள்ளனர்.

 

5 ஆம் தேதி காலை சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என்று கூறிய போது, எப்போது வரும் 5 ஆம் தேதி எனக் காத்திருந்தவர், தான் வளர்ந்த பட்டுக்கோட்டை வந்த போது ஊரே திரண்டு நின்று பயிற்சியாளர் ரவி மற்றும் லோகப்பிரியா ஆகியோருக்கு மாலைகள் அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

 

Tribute Commonwealth gold medalist Lokapriya late father grave

 

அதன் பிறகு தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள கல்லுக்காரன்பட்டிக்கு சென்ற போதும் அங்கும் வரவேற்றனர். நேராக தன் தந்தை செல்வமுத்து புதைக்கப்பட்டுள்ள கல்லறைக்குச் சென்று, கதறி அழுது மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய பிறகு, வீட்டிற்குச் சென்ற லோகப்பிரியாவை மொத்த உறவுகளும்  கட்டிப்பிடித்து கதறி அழுதனர். மீண்டும் ஒரு முறை தன் தந்தைக்கு அஞ்சலியாக தன் தந்தையின் நினைவோடு நாட்டுக்காக தொடர்ந்து சாதிப்பேன் என்றார். காமன்வெல்த் வெற்றியைக் கொண்டாட வேண்டிய நேரத்தில் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வு அனைவரையும் கண்கலங்க வைத்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.