Skip to main content

நீதிமன்றத்தில் போலீசை போட்டு தாக்கிய கொள்ளையன் சுரேஷ்!

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

திருச்சி லலிதா ஜூவல்லரி யில் கடந்த 2ஆம் தேதி 13 கோடி மதிப்புடைய தங்க வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக திருவாரூரை சேர்ந்த மணிகண்டன், கனகவல்லி, தஞ்சாவூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான முருகன் பெங்களூர் நீதிமன்றத்திலும் இவனுடைய அக்காவான கனகவல்லியின் மகன் சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.

 

police

 

திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் வங்கியில் 470 பவுன் நகை 19 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது. லலிதா ஜீவல்லரி நகைக்கடை கொள்ளை சிக்கியவர்கள் தான் இங்கும் கைவரிசை காட்டியுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் முருகன் பெங்களூர் போலீசார் கஸ்டடியில் எடுத்து திருச்சிக்கு அழைத்து வந்து கல்லணை அருகே உள்ள ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ தங்க நகைகளை அள்ளி சென்றனர். தொடர்ந்து அவனிடம் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

அதேபோல் சுரேஷ்யையும் திருச்சி போலீசார் கஸ்டடி எடுத்து நகை கொள்ளை பற்றி விசாரித்து வந்தனர் ஏழு நாள்கள் முடிந்து 21.10.2019 அன்று சுரேசை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர் . இந்த நிலையில் வங்கிக் கொள்ளை தொடர்பாக போலீஸ் காவலில் எடுத்து அனுமதி கோரி ஶ்ரீரங்கம் கோர்ட்டில் நம்பர் ஒன் டோல்கேட் போலீசார் 22.10.2019 மனு அளித்தனர். இந்த மனு மீதான விசாரணையை போலீசார் ஶ்ரீரங்கம் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து நீதிபதி சிவகாமிசுந்தரியின் முன் ஆஜர்படுத்தினர் .

அப்போது மீண்டும் கஸ்டடிக்கு அனுப்ப சுரேஷ் தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீஸ் காவல் முடிந்த நிலையில் எனது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என சுரேஷ் கூறியுள்ளான். இந்த மனுவை எடுத்து சுரேஷ் அறிக்கை அனுப்ப கோரும் மனு மீதான விசாரணை இன்று நடந்தது .

இதனிடையே மதுரையை சேர்ந்த கணேசனை டோல்கேட் போலீசார் கடந்த 18ம் தேதி முதல் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைவதால் கணேசனை போலீசார் நாளை ஸ்ரீரங்கம் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். இந்த நிலையில் கோர்ட்டில் இருந்து வெளியே வந்தபோது கொள்ளையன் சுரேஷ் திடீரென பத்திரிகையார்களிடம் பேசினான்.

அப்போது எனது குடும்பத்தினரை போலீசார் பிடித்து சித்திரவதை செய்தனர் அதனால் தான் நான் செய்த தவறை ஒப்புக்கொண்டு கோர்ட்டில் சரண் அடைந்தேன். நடந்த எல்லாவற்றையும் போலீசாரிடம் கூறி விட்டேன். ஆனாலும் எனது குடும்பத்தினர்கள் உறவினர்கள் நண்பர்கள் 18 பேரை போலீசார் பிடித்து சித்திரவதை செய்து வருகின்றனர் இதில் சிலர் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். என்றால் கொள்ளையன் சுரேஷ் திடீரென போலீசாரை குற்றம்சாட்டி கோர்ட்டு வளாகத்தில் போட்டு தாக்கியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் போலீசாரே அதிர்ச்சியடைந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.