Skip to main content

ஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது போலீசில் புகார்!

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

தமிழக அரசியலில் மட்டுமின்றி நடிகர் சங்க தேர்தலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜே.கே.ரித்தீஷ்.திமுக சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார. இவர் சினிமாவில் ஒரு சில படங்களில் நாயகனாகவும், ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் அண்மையில் வெளியாகி ஹிட்டான எல்கேஜி படத்தில் வில்லன் ரோலில் நடித்திருந்தார். ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென மரணமடைந்தார் இது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

jk.rithish wife



இது சினிமா துறையினரை மட்டுமின்றி அரசியல் கட்சியினரிடையும் பெரும் சோகத்தை உண்டாக்கியது. இந்தவேளையில் தற்போது அவரது மனைவி ஜோதி மீது போலீசில் ஒரு புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. ரித்தீஷிடம் உதவியாளராக இருந்த கேசவன் என்பவர் தான் அந்த புகாரை அளித்துள்ளார். நான் பல வருடங்களாக ரித்தீஷிடம் உதவியாளராக இருந்துள்ளேன். அதனால் அவர்  தனக்கு சொந்தமான ஒரு வீட்டில் என்னை தங்கவைத்தார்.அவருக்கு உதவியாளராக இருந்த போது சம்பளம் ஏதும் வழங்கவில்லை என்றும் அதற்கு பதிலாக அவரது வீட்டில் இருக்க வைத்தார் என்று கூறியுள்ளார்.

ரித்தீஷ் மரணமடைந்த பிறகு அவரது மனைவி ஜோதி தற்போது சொத்துக்களை சரிபார்த்து வருகிறார். இந்த வீடு குறித்து அறிந்து உடனே உதவியாளர் கேசவனை காலி செய்யும்படி சொல்லியிருக்கிறார் ரித்தீஷ் மனைவி . ஆனால் தனக்கு சம்பளமாக கொடுக்கவேண்டிய பணத்தை கொடுத்தால் காலி பண்ணுவதாக கேசவன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவரை அடியாட்கள் வைத்து ஜோதி மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் கேசவன் போலீசில் புகார் கொடுத்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.