தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தொகுக்கப்பட்ட, ‘அறிஞர்கள், ஆளுமைகள் பார்வையில் திராவிட மாடல் அரசு’ என்று நூல் நேற்று வெளியிடப்பட்டது. செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் இந்த நூல்வெளியிடும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வெளியிட்டார். இந்தப் புத்தக வெளியிட்டின்போது, தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கழக அரசு அமைந்த இந்த ஓராண்டில் வரலாற்றில் நின்று பேசும் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ஆல் போல் தழைக்கவுள்ள நமது சாதனைகளை அழகிய ஓவியங்களுடன் செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது. இந்தச் சாதனை விளக்கப் புத்தகங்களைப் படிக்கவும்! பரப்பவும்” என்று பதிவிட்டுள்ளார்.