Skip to main content

அத்திவரதர் தரிசனம்: எடப்பாடியை புளந்து கட்டிய மோடி

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

 

அத்திவரதர் தரிசனத்தில் தமிழக அரசு ஏகப்பட்ட குளறுபடிகளை செய்துள்ளதால் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அத்திவரதரை காண வருவது ரத்தாகியுள்ளது. 
 

வருகின்ற வாரத்தில் அத்திவரதரை காண்பதற்காக பிரதமரும், அமித்ஷாவும் வருவதாக இருந்தது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கிறது என ஆராய மத்திய அரசின் டீம் ஒன்று காஞ்சிபுரத்திற்கு வந்தது. அங்கிருந்த ஏற்பாடுகளை பார்த்த அவர்கள், அத்திவரதரை தரிசிக்க பிரதமரும், உள்துறை அமைச்சரும் வந்தால் மகாமகத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் குளித்தபோது மக்கள் நெரிசலில் சிக்கி மரணம் அடைந்ததுபோல் ஏதாவது நிகழும் என மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்தார்கள்.

 

edappadi palanisamy - narendra modi


 

இந்த அறிக்கையை வைத்து நிர்மலா சீத்தாராமன் தமிழக அரசிடம் பேசினார். வடஇந்தியாவில் கும்பமேளா நடந்தது. ஒரே நேரத்தில் பத்து லட்சம் பேர் குவிந்தனர். அதில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் உத்திரப்பிரதேச அரசு பார்த்துக்கொண்டது. அதற்கு முக்கிய காரணம் உத்திரப்பிரதேச அரசு போலீசை மட்டும் நம்பவில்லை. அவர்கள் பொதுமக்களை பாதுகாக்க தொண்டர்களை பயன்படுத்தினார்கள். 
 

காஞ்சிபுரத்தில் நடக்கும் அத்திவரதர் விழாவில் ஏற்கனவே ஐந்து பேர் மரணம் அடைந்துள்ளனர். அதுபோல நடைபெறால் இருக்க தொண்டர்களை பயன்படுத்துங்கள் என அட்வைஸ் செய்தார். தலைமைச் செயலாளரும், டிஜிபியும் காஞ்சிபுரம் சென்றார்கள். இந்த உரையாடல்களை கேள்விப்பட்ட நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமியிடம், நான் அத்திவரதரை சந்திக்கக் கூடாதா? என்று கேட்டிருக்கிறார். நீங்கள் வந்தால் நெரிசல் ஏற்படும் என உளவுத்துறை சொல்கிறது என எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். 


 

இதனால் தனது விசிட்டை பிரதமரும், உள்துறை அமைச்சரும் ரத்து செய்துவிட்டார்கள். மறுபடியும் பிரதமர் அலுவலகத்தை தமிழக முதல்வர் அலுவலகம் தொடர்புகொண்டு, பிரதமர் விசிட் ரத்தானது மாநில அரசுக்கு அவமானமாக உள்ளது என வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். அதைக்கேட்ட பிரதமர் அலுவலக அதிகாரிகள். இத்தகவலை பிரதமரிடம் சொல்லியிருக்கிறார்கள். தன்னிடம் தகவலை சொன்ன பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சுத்தமாக சரியில்லை என்பதையே காட்டுகிறது என்று கூறியிருக்கிறார். 
 

மேலும், தான் எப்போது தமிழ்நாட்டுக்கு போனாலும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது மாநில அரசு தனது வருகை பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என கருதுகிறது. இது எடப்பாடிக்கு நல்லது அல்ல. நிலைமை இப்படியே போனால் மத்திய அரசு சிறப்பு படைகளை தமிழ்நாட்டிற்கு அனுப்பி பிரதமர் உள்பட விஐபிக்கள் வருகையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை செய்யுங்கள் என்று பிரதமர் மோடி கூறினார். 


 

பிரதமரின் கோபத்தை கண்டு அஞ்சி நடுங்கிய எடப்பாடி பழனிசாமி, பிரதமர் அலுவலகத்தை மறுபடியும், மறுபடியும் தொடர்புகொண்டு பிரதமர் வர வேண்டும் என கெஞ்சியிருக்கிறார். அதைத்தொடர்ந்து பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு அத்திவரதர் எழுந்துநின்று அருள்பாலிக்கும் கடைசி நாட்களில் பிரதமரும், அமித்ஷாவும் காஞ்சிபுரத்திற்கு வர முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.