அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம்: உறுப்பினர்கள் வருகை - போக்குவரத்து நெரிசல்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் இன்று அதிமுக பொதுக்குழு கூடுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 750 செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 2,300 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்கள் என யாரும் அழைக்கப்படவில்லை. அழைப்பிதழ்கள் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு நடக்கும் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தற்போது உறுப்பினர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.