ADVERTISEMENT

அ.தி.மு.க கோஷ்டி மோதல்-ஒருவருக்கு மண்டை உடைப்பு, கார் சூறையாடல் 

07:46 AM Feb 26, 2020 | kalaimohan

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக அமைச்சர் எம்.சி சம்பத் ஆதரவாளர்கள் ஒரு கோஷ்டியாகவும், அ.தி.மு.கவின் அமைப்பு செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் ஆதரவாளர்கள் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதில் சொரத்தூர் ராஜேந்திரன் ஆதரவாளர் செல்வம் என்பவரை சம்பத் ஆதரவாளர் ராதாகிருஷ்ணன் சத்திரம் பகுதியில் காரில் வந்து கொண்டிருக்கும்போது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மண்டை உடைந்த செல்வம் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இருதரப்பு மோதலில் கடைகள் சேதப்பட்டன. மாறி மாறி சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆளும் அதிமுகவின் கோஷ்டி மோதலால் குறிஞ்சிப்பாடி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT