Skip to main content

"போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க தனி ஆணையத்தை உருவாக்கியுள்ளார் முதல்வர்" - அமைச்சர் பொன்முடி

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

minister ponmudi talks about illegal liquor incident marakkanam chengalpattu 

 

மரக்காணம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மரக்காணம் அருகே உள்ள எக்கியர் குப்பத்தில் மட்டும் இதுவரை 9 பேர் இறந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டு 15க்கும் மேற்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், எம்.எல்.ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் மாவட்ட ஆட்சியர் பழனி, வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன், எஸ்.பி ஸ்ரீநாதா மற்றும் காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் சென்றனர்.

 

சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும், அமைச்சர் பொன்முடி பத்திரிகை மற்றும் ஊடகத்தினரிடம் பேசும் போது, "குட்கா, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருட்கள் தமிழ்நாட்டில் அதிகரிக்கக் காரணம் கடந்த பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகதான். இதைக் கட்டுப்படுத்த அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்பனை செய்ய வைத்ததே அவர்கள் தான்.

 

கடந்த இரண்டு ஆண்டுக் கால ஆட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை கட்டுப்படுத்த மற்றும் தடுக்க சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறையில் தனி ஆணையத்தை உருவாக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். கடந்த ஆட்சியில் முன்னாள் சுகாதார அமைச்சர் மீது குட்கா வழக்கு பதிவு செய்யப்பட்டு 10 எம்.எல்.ஏக்கள் மீது சட்டசபையில் நடவடிக்கை எடுத்தது கடந்த கால ஆட்சியில் தான். கள்ளச்சாராயம் விற்பனை பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் அருகதையும் கிடையாது.

 

கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தான் டாஸ்மாக் மூலம் அரசே மது விற்பனை செய்யும் என அறிவித்து நடைமுறைப்படுத்தினார்கள். அதற்கு சட்டசபையில் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதற்காக என் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இப்படி தமிழகத்தில் சீர்கேடுகள் அதிகரிக்கக் காரணமானது அதிமுக ஆட்சி தான்" என்று குற்றம் சாட்டினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.