Skip to main content

அரசு வேலை வாங்கித்தருவதாக 1.40 கோடி சுருட்டினோம் - எடப்பாடி உதவியாளரின் கூட்டாளி பரபரப்பு வாக்குமூலம்

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

We rolled over 1.40 crore that the government would buy the job !; Edappadi aide's allied sensational confession!

 

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராக இருந்த மணியின் கூட்டாளி, அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி பலரிடம் 1.40 கோடி ரூபாய்வரை வசூலித்து மோசடி செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 28). பொறியியல் பட்டதாரியான இவர், சேலம் மாவட்டக் குற்றப்பிரிவில் ஒரு புகார் அளித்து இருந்தார். 

 

அந்தப் புகார் மனுவில், ''தமிழக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராகப் பணியாற்றி வந்த சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்த மணி (வயது 51) என்பவர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, என்னிடம் 13 லட்சம் ரூபாய் வாங்கினார்.

 

ஆனால் அவர் உறுதியளித்தபடி எனக்கு அரசு வேலை வாங்கித் தரவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டபோது அவர் தர முடியாது எனக் கூறிவிட்டார்.

 

இந்த மோசடிக்கு, ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டியைச் சேர்ந்த மணியின் நண்பர் செல்வகுமார் (வயது 49) என்பவரும் உடந்தையாக இருந்தார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' எனப் புகார் மனுவில் தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார். 

 

அதன்பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணி, செல்வக்குமார் ஆகிய இருவரையும் தேடிவந்தனர். இதற்கிடையே மணி, முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. அதன்பின் தலைமறைவான அவரை, தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் காவல்துறையினர் கைது செய்தனர். 

 

மணியின் கூட்டாளி செல்வகுமார் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், டிச. 24ம் தேதியன்று இரவு, கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் செல்வகுமார் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. 

 

இதையடுத்து, மறுநாள் அதிகாலையில் காவல்துறையினர் செல்வகுமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ''போக்குவரத்து, வருவாய், கல்வித்துறை எனப் பல துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் நானும், எடப்பாடி பழனிசாமியின் உதவியாளருமான நடுப்பட்டி மணியும் 1.40 கோடி ரூபாய் வாங்கினோம். 

 

அதில், இதுவரை 82 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டோம். தமிழ்ச்செல்வனிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கினோம். ஆனால் அவருக்கு எங்களால் வேலை வாங்கிக் கொடுக்க முடியவில்லை'' என்று கூறியதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது.

 

இதையடுத்து, செல்வகுமாரை சேலம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதித்துறை நடுவர் உத்தரவின்பேரில் காவல்துறையினர் அவரை, சங்ககிரி கிளைச்சிறையில் அடைத்தனர். கடந்த 2 மாதமாக காவல்துறைக்கு போக்கு காட்டி வந்த செல்வகுமார் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.