இதற்கிடையில் நெய்வேலியில் வேன் மீது ஏறி விஜய் செல்பி எடுத்து ரசிகர்களை குஷிபடுத்தினார். இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரல் ஆனாது. அதுமட்டும் இல்லாமல் #திமுக_தலைவர்_விஜய் என்ற ஹேஸ்டேக்கும் திடீரென வைரல் ஆனது. இவை அனைத்தும் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், நடிகர் விஜய் மற்றும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருக்கும் போட்டோஷாப் செய்யப்பட்ட போஸ்டர் தமிழகத்தில் பல இடத்தில் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போஸ்டரில் நடிகர் விஜய், ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் விஜயுடன் பேசுவது போல போட்டோ ஷாப் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம்... கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்... மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள்..." என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.