Skip to main content

"இளம் தலைமுறையினருக்கு சாமி பக்தி இருக்க வேண்டும்" - அருண் விஜய்

Published on 04/08/2023 | Edited on 04/08/2023

 

arun vijay about vijay politics and more

 

அருண் விஜய் தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் 'மிஷன் சாப்டர் 1 - அச்சம் என்பது இல்லையே' படத்தில் நடித்துள்ளார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு முன்பு கூறியதால் ரிலீஸ் தேதி கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

மேலும் பாலா இயக்கும் 'வணங்கான்' படத்திலும் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தனது மனைவியுடன் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்து கிரிவலம் வந்தார். அவரைப் பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர். 

 

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மன நிம்மதியும் ஒரு தெளிவும் திருவண்ணாமலை அண்ணாமலையாரைப் பார்க்கும் போது கிடைக்கும். அதனால் அவரைப் பார்க்க காரணம் தேவையில்லை. எனக்கு தோன்றும் போதெல்லாம் வருவேன். என்னுடைய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக காத்திக்கிட்டு இருக்கு. ஏ.எல். விஜய்யின் மிஷன் சாப்டர் 1 படம் விரைவில் வெளியாகவுள்ளது. மீண்டும் திருவண்ணாமலை வர வேண்டிய சூழல் இருக்கு. ஏனென்றால் வணங்கான் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இங்குதான் நடக்கவுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் நெருங்கி வருவதால் சொல்ல வேண்டிய விஷயமாக இருக்கு. இங்கே வந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. 

 

இன்றைய இளம் தலைமுறையினருக்கு சாமி பக்தி இருக்க வேண்டும். இறைவன் மீது ஒரு பயம் இருக்க வேண்டும். ஒரு தெளிவான முடிவு எடுப்பதற்கு இறை நம்பிக்கை இருந்தால் நல்லது. நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்தானே. யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவர்கள் வரலாம். புது ஆட்களும் வர வேண்டும் என்பதுதான் மக்களுடைய விருப்பமும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வருபவர்களை நாம் வரவேற்க வேண்டும். விஜய் வருவதும் அப்படிதான். அதை நல்ல விஷயமாக பார்க்கிறேன். அதற்கு முன்பு அவர் அறிவிக்கட்டும். என்னுடைய அரசியல் பயணம் இப்போதைக்கு எதுவும் இல்லை. நடிப்பு பணிகளும் பொது பணிகளும் இருக்கு. அதனால் எதிர்காலத்தில் பார்க்கலாம். 

 

நடிகர் சங்க தேர்தலில் ஈடுபட நல்ல ஆட்கள் இருக்கிறார்கள். பெரியவர்கள் இருப்பதால் அவர்களை முன்னிறுத்தி அவர்களுடன் பக்கபலமாக நிற்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நடிகர் சங்க கட்டிடம் குறித்து கார்த்தியிடம் பேசினேன். அடுத்த கட்டத்திற்கு செல்வதை நோக்கி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொன்னார். அநேகமாக கூடிய விரைவில் என்ன பண்ண உள்ளோம் என்பதை அவர்கள் அறிவிப்பார்கள்" என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.