Skip to main content

இரட்டை இலை வாக்குகள் யாருக்கு? கடும்போட்டியில் சாருபாலா தொண்டைமான்! திருநாவுக்கரசர்!

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

திருச்சி தொகுதியை இரண்டு முறை தொடர் வெற்றிபெற்ற ஆளும் கட்சியான அதிமுக, தேமுதிகவுக்கு தாரைவார்த்தது. இதனால் இரட்டை இலை சின்னம் தேர்தல் களத்தில் இல்லை.

 

charubala thondaiman

 

இதனால் இரட்டை இலை வாக்குகளை வளைப்பதற்கு காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரும், அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமானும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
 

காரணம் இதற்கு முன்பு இரண்டு முறை வெற்றிபெற்ற எம்.பி பா.குமார். கடைசியாக நடந்த தேர்தலில் திமுக – அதிமுக நேரடியாக களத்தில் சந்தித்தனர். அந்த தேர்தலில் அதிமுக ப.குமார் 4,58,478 மற்றும் திமுக அன்பழகன் 3,08,002 முன்றாவது அணியாக இருந்து போட்டியிட்ட தேதிமுக ஏ.எம்.ஜி.விஜயகுமார் 94,785, காங்கிரஸ் சார்பில் தனித்து போட்டியிட்ட சாருபாலா தொண்டைமான் 51,537 வாக்குகளை பெற்றனர். இந்த தேர்தலில் 1.50 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் அதிமுக பா.குமார். 
 

thirunavavukarasar

 

திமுக நேரடியாக களத்தில் நின்றே 1.50 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதால் இந்த முறை திருநாவுக்கரசர் கை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதால் அவருக்கு கூடுதலாக வாக்குகள் வேண்டும் என்பதால் இரட்டை இலை வாக்குகளை பெற அவர் பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி வருகிறார். 
 

அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், பிரச்சாரத்தின்போது இரட்டை இலை சின்னம் நேரடியாக போட்டியில் இல்லை. அதனால், அதற்குரிய ஓட்டுகளை ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லோம் எங்கள் சின்னமான பரிசு பெட்டகம் சின்னத்தில் போட்டியிடும் எனக்கே வழங்கிட வேண்டுமென்று கேட்கிறார்.
 

அதேபோல சாருபாலா அதிமுக கூட்டணியில் இருக்கும்போது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அப்போது இருந்தே அதிமுக பிரமுகர்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்பதும், அப்போது கோட்டதலைவராக இருந்தவர்தான் தற்போது அமமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் என்பதால் தற்போது இரட்டை இலை வாக்குகள் எல்லாம் சாருபாலவுக்கே வரும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

 

dmdk

 

அதே நேரத்தில் திருநாவுக்கரசரும் தன் பங்குக்கு இரட்டை இலை சின்னம் கொண்டு வந்த எம்ஜிஆருக்கு தான் நெருக்கமானவர் என்பதாலும் இரட்டை சின்னம் திருச்சியில் போட்டியிடாததால் எனக்கே போடுங்கள் என்றும் எம்.ஜி.ஆர் காலத்து பழைய அதிமுக பிரமுகர்களிடம் தனிப்பட்ட முறையில் திருநாவுக்கரசர் பேசி வருகிறார். இந்த வாக்குகள் தனக்கு பயன்படும் என்று வெகுவாக நம்புகிறார். இப்படி முரசு சின்னத்திற்கு போக வேண்டிய வாக்குகளை இவர்கள் இருவருக்கும் இடையே இரட்டை ஓட்டுகளை வாங்க போட்டி போட்டு கொண்டிருக்கும் நிலையில், ஜெயலலிதவை இழந்து தவிக்கும் அதிமுக தொண்டர்கள் தான் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் இருக்கிறார்கள். மேலும் கண்ணுக்கு எதிரே தனக்கு வர வேண்டிய வாக்குகள் பறிபோகிறதே என்று வருந்துகிறார் தேமுதிக வேட்பாளர் தர்மபுரி மருத்துவர் இளங்கோவன். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.