இன்று நெல்லையில் நடந்த மக்கள் நீதி மய்யம் முதலாமாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கட்சியின் கொள்கைகளை கமல்ஹாசன் வெளியிட்டார். சென்ற ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் தனது புதிய கட்சியைத் தொடங்கினார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டிற்கு சென்று வந்து அன்றைய தினம் மாலை மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயரை அறிவித்து கொடியை அறிமுகப்படுத்தினார் கமல். கட்சியின் கொள்கைகள் குறித்த கேள்விகளுக்கு, "குழு ஒன்று கொள்கைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கொள்கைகள் ஒரு புத்தகமாக வெளியிடப்படும்" என்று கூறினார் கமல்.
ADVERTISEMENT
தற்போது கட்சியின் முதலாமாண்டு தொடக்க விழா கூட்டங்கள் நடந்து வருகின்றன. இன்று மாலை நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரும் திரளான கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் கட்சியின் கொள்கைகளை வெளியிட்டார் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். அவர் வெளியிட்ட கொள்கைகள்...
ADVERTISEMENT
Show comments