Skip to main content

மக்கள் நீதி மய்யம் கார்ப்பரேட் அரசியலை முன்னெடுக்கிறதா? -முரளி அப்பாஸ் பதில்...

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

நேற்று பிரபல தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்த கருத்து. 
 

makkal needhi maiam


நேற்று கமல்ஹாசன், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடந்திருக்கிறது, இது கார்ப்பரேட் அரசியலை கையிலெடுப்பது போன்று உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளதே...

இது அப்படியல்ல, அவுங்க ஜெகன்மோகனுக்கு பண்ணிருக்காங்க, மம்தா பானர்ஜி பேசியிருக்காங்க, தமிழ்நாட்டுலகூட திமுக, அதிமுக அவங்கள்ட்ட பேசிட்டு இருக்கிறதா தகவல் வருது. அவங்க அதை வெற்றிகரமாக பண்ணிட்டு இருக்குறதுனால அவங்கள நிறையபேர் அணுகுறாங்க, அவ்வளவுதான். இந்தத் தேர்தலை நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றும் தேர்தலாகத்தான் பார்கிறோம். அதற்காக கூட்டணி என்ற பெயரில் யாருடனும் சமரசம் செய்துகொள்ள விருப்பமில்லை.

நாம் களத்தில் பிரச்சாரம் செய்தாலும், இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சாரமும் தேவைப்படுகிறது. இது அனைத்து கட்சிகளிலும் உள்ளது. அவர்களே இதற்கென்று தனியாக ஒரு பிரிவை ஏற்படுத்தி செய்கின்றனர். இவர் பிரபலமானவர் என்பதால் வெளியில் தெரிகிறது. வேறெதுவும் இல்லை. 

 

 

makkal needhi maiam



அண்மையில் ஹைட்ரோகார்பன் குறித்த வீடியோ வெளியானதே...

ஒரு விஷயத்தை நமக்கு ஆதரவான கட்சி கொண்டுவந்தால் ஆதரவோ, எதிர்ப்பான கட்சி கொண்டுவந்தால் எதிர்ப்போ தெரிவிக்கும் வழக்கம் இங்கு இல்லை. ஒரு விஷயம் நடந்தால் அதுகுறித்த அனைத்து தகவல்களையும், அதன் சாதக பாதகங்களையும் கமல்ஹாசன் கேட்பார். அதையெல்லாம் ஆராய்ந்தபின்தான் அதுகுறித்து பேசவேண்டும் என்பார். மொத்தத்தில் நமது பாராட்டும் சரியாக இருக்கவேண்டும், நமது குற்றச்சாட்டும் சரியாக இருக்கவேண்டும் எனக்கூறுவார்.

தற்போதுகூட நீரியல் மேலாண்மை குறித்து கனகராஜ் போன்ற நீரியல் மேலாண்மை நிபுணர்களுடன் பேசி வருகிறோம். ஆளுங்கட்சி வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. அது நீர் பிரச்சனை தீரவேண்டும் என்பதற்காக இல்லை, இந்தப் பிரச்சனையிலிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். நீண்டகால திட்டங்கள் எதையும் அவர்கள் செய்யவில்லை. அந்த வீடியோ ஹைட்ரோ வீடியோ மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான். ஹைட்ரோகார்பன் திட்டம் விளைநிலங்களில் வரக்கூடாது என்பதுதான் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு. 

 

 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.