ADVERTISEMENT

விவசாயிகளுடன் மத்திய அரசு 9ஆம் கட்ட பேச்சு வார்த்தை..! 

12:35 PM Jan 15, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


டெல்லியில் மத்திய அரசு விவசாயிகளுக்கு இடையேயான 9ஆம் கட்ட பேச்சு வார்த்தை தொடங்கியது.

ADVERTISEMENT


டெல்லி விக்யான் பவனில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை தொடங்கியது.


3 வேளாண் சட்டங்களையும் இரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் 52வது நாளாக போராடி வருகின்றனர். முன்னதாக மத்திய அரசு 8 முறை விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தது. ஆனால் அந்த பேச்சு வார்த்தைகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தது. இந்த நிலையில் இன்று 9ஆம் கட்ட பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. இதில் 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT