Skip to main content

‘மொத்த செலவையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்’ - ஹேமமாலினிக்கு விவசாயிகள் எழுதிய கடிதம்...

Published on 18/01/2021 | Edited on 18/01/2021

 

farmers invite hema malini to punjab

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பாஜக எம்.பி ஹேமமாலினியை பஞ்சாப் வந்து இந்த சட்டங்கள் குறித்து விளக்கம் கொடுக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளனர். 

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாஜக எம்.பி. ஹேமமாலினி விவசாயிகளின் போராட்டத்தை விமர்சித்திருந்தார். "அவர்களுக்கு என்னதான் வேண்டும் எனத் தெரியவில்லை. எந்தவித முகாந்திரமும் இல்லாமல் போராடுகின்றனர். எதிர்க் கட்சிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இப்படி செயல்படுவதைப் போலத் தெரிகிறது" என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில், ஹேமமாலினி பஞ்சாப் வந்து இந்த சட்டங்கள் குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

 

இதுகுறித்து காந்தி கிசான் சங்கர்ஷ் விவசாய குழு ஹேமமாலினிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "இந்தப் போராட்டத்தில் ஏற்கனவே 100 பேர் உயிரிழந்துள்ள சூழலில், விவசாயிகளால் சட்டங்களைப் புரிந்துகொள்ள முடியாது என்று நீங்கள் கூறியது வேதனையாக இருந்தது. நாங்கள் உங்களைப் பஞ்சாப்புக்கு அழைக்க விரும்புகிறோம். விவசாயிகளால் புரிந்துகொள்ள முடியாதது என நீங்கள் கூறும் இந்தச் சட்டங்களைப் பற்றி எங்களுக்கு நீங்கள் தெளிவாக விளக்க வேண்டும். எங்கள் நிலைக்கு ஏற்ப ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நீங்கள் தங்குவதற்கும், போக்குவரத்து வசதிகளுக்கும் ஏற்பாடு செய்வோம். விவசாயிகளும் தொழிலாளர்களும் இதற்கான பணத்தைச் செலுத்துவார்கள். உங்களது விளக்கம், டெல்லியில் கடும் குளிரில் போராடி விவசாயிகள் உயிரை விடுவதைத் தடுத்து நிறுத்தலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஹேமமாலினிக்கு விருது

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

 indian best personality award for actress hema malini at IFFI 2021

 

சிறந்த படைப்புகள், கலைஞர்கள் என திரைத்துறையில் சாதித்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த சனிக்கிழமை (20.11.2021) அன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. மத்திய விளையாட்டு மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கிவைத்த இவ்விழா, வரும் 28ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், நடிகர் சல்மான் கான், நடிகை சமந்தா  உட்பட பல திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.  

 

இவ்விழாவில், நடனம், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என சினிமாத் துறையில் பன்முகத் திறமைகொண்ட நடிகை ஹேமமாலினிக்கு சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் இணை அமைச்சர் எல். முருகன் இருவரும் வழங்க ஹேமமாலினி பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, ஹாலிவுட் திரைப்பட இயக்குநர்களான இஸ்த்வான் சாபோ, மார்ட்டின் ஸ்கோர்செஸி ஆகியோருக்கு ‘சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.

 

இந்த திரைப்பட விழாவில் ஓடிடி தளத்தில் வெளியான படங்களும் திரையிடப்படவுள்ளன. அந்த வகையில், தமிழில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த ‘கூழாங்கல்’ திரைப்படமும், இயக்குநர் ஜெயச்சந்திரன் ஹாஸ்மி இயக்கத்தில் வெளியான 'ஸ்வீட் பிரியாணி' குறும்படமும் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

சூர்யா படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

Published on 20/11/2021 | Edited on 20/11/2021

 

Actress Hema Malini  return to kollywood in surya movie

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சூரி, வினய் ராய் உள்ளிட்ட பலரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை 2டி என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  

 

ad

 

இந்நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஹேம மாலினி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாத்துறையில் நடனம், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பன்முக திறமைகொண்ட இவர், தமிழில் கடைசியாக  'ஹே ராம்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா - பாலா கூட்டணியில் உருவாகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.