மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
அதேபோல், இன்று தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் தலைமையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.