ADVERTISEMENT

கேரளா இரண்டாவது நாளாக 10 ஆயிரத்தை கடந்த தினசரி கரோனா பாதிப்பு!

06:55 PM Oct 07, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு மிகப்பெரும் அளவில் குறைந்துள்ள நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களைவிட மிக அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனையடுத்து கேரள அரசு கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதனையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது.

இதனையடுத்து படிப்படியாக குறைந்த தினசரி கரோனா பாதிப்பு கடந்த 4 ஆம் தேதி 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து, 8,850 ஆக பதிவானது. இருப்பினும் கடந்த ஐந்தாம் தேதி 9,735 ஆக அதிகரித்த தினசரி கரோனா பாதிப்பு, நேற்று 10 ஆயிரத்தை கடந்தது. நேற்று அம்மாநிலத்தில் 12,616 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்தநிலையில் இன்றும் கேரளாவில்10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

கேரளாவில் இன்று மட்டும் 12, 288 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 141 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 15,808 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT