kerala

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு மிகப்பெரும் அளவில் குறைந்துள்ள நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களைவிட மிக அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனையடுத்து கேரள அரசு கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதனையடுத்துஅம்மாநிலத்தில் கரோனாபாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது.

Advertisment

இந்தநிலையில்நேற்று முன்தினம் கேரளாவில் தினசரி கரோனாபாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து,8,850ஆக பதிவானது. ஆனால் நேற்று அம்மாநிலத்தில் சற்று அதிகரித்ததினசரி கரோனாபாதிப்பு9,735 ஆக பதிவானது. இந்தநிலையில்இன்று மீண்டும் கேரளாவில் தினசரி கரோனாபாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

Advertisment

இன்று கேரளாவில் 12,616 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால்பாதிக்கப்பட்ட 134 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில்கரோனாதொற்றிலிருந்து 14,516 மீண்டுள்ளனர்.