ADVERTISEMENT

இந்தியாவில் சற்று குறைந்த தினசரி கரோனா பாதிப்பு!

09:28 AM Jan 11, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துகொண்டே சென்ற நிலையில், இன்று கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 79 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியான நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 63 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 277 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 69 ஆயிரத்து 959 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதற்கிடையே இந்தியாவில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1247 பேருக்கும், ராஜஸ்தானில் 645 பேருக்கும், டெல்லியில் 546 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் 1, 711 பேர் ஒமிக்ரான் பாதிப்பிலிருந்து மீண்டுள்ள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT