corona

இந்தியாவில் தினசரி கரோனாபாதிப்பு, மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில்கடந்த 24 மணிநேரத்தில்1 லட்சத்து 41 ஆயிரத்து 986 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணிநேரத்தில்ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment

மேலும் கடந்த 24 மணிநேரத்தில்கரோனாவால்பாதிக்கப்பட்ட 285 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில்கரோனாபாதிப்பிலிருந்து 40, 895 பேர் மீண்டுள்ளனர். அதேபோல் நாட்டில் ஒமிக்ரான்பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3071 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

இந்த 3071 பேரில் 1203 குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.