Skip to main content

இந்தியாவில் மூன்றரை லட்சத்தை நெருங்கிய தினசரி கரோனா பாதிப்பு

Published on 21/01/2022 | Edited on 21/01/2022

 

corona

 

இந்தியாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

மேலும், கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 703 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 777 பேர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

 

இதற்கிடையே, நாட்டில் ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 9,692ஆக உயர்ந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்