Skip to main content

ஒருதலை காதலால் பெண் மருத்துவரை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021
incident in kerala...police investigation

 

கேரளாவில் சமீபத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண்களின் தொடா் தற்கொலை மரணம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இளம்பெண் மருத்துவரை ஒருதலை காதலால் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று அதே துப்பாக்கியால் அந்த வாலிபரும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கண்ணூா் நாரகத்து பகுதியை சோ்ந்த போலீஸ் டிராபிக் மாதவன் மற்றும் ஆசிாியையான சபினா தம்பதியின் மகள் மானஸா (24). இவர் கொச்சி கோதமங்கலம் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவர் படித்து விட்டு அங்கு தற்போது பயிற்சி மருத்துவராக பணிபுாிந்து வந்தார்.

 

இந்தநிலையில் கண்ணூர் தலச்சோியை சேர்ந்த விற்பனைக்காக செம்மீன்கள் வளர்த்து வரும் ரகுத்தமன் மற்றும் ரஜிதா தம்பதியினரின் மகன் ராகில்(32) எம்.பி.ஏ படிப்பு முடித்து விட்டு பிளைவுட் தொழில் செய்து வருகிறார். மானஸாவும் ராஹிலும் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டதையடுத்து ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவா்களின் பழக்கம் நண்பர்களாக தினமும் நீடித்தது. இந்தநிலையில் ராஹிலின் பழக்கம் வழக்கத்தில் வித்தியாசம் ஏற்பட்டு அது மானஸாவுக்கு பிடிக்காமல் போக உடனே ராஹிலின் தொடர்பை துண்டித்தார் மானஸா.

 

இதனால் ஆத்திரமடைந்த ராஹில் அவரை தினமும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், முகநூல் வழியாக என்னை காதலி என்னை திருமணம் செய்துகொள் என தொந்தரவு செய்து வந்தான். இதனால் மானஸா கண்ணூா் சிற்றி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் ராஹிலை எச்சரித்து அனுப்பினார்கள். இது ராஹிலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மானஸா கோதமங்கலத்தில் தங்கியிருந்த விடுதியின் அருகில் உள்ள இன்னொரு விடுதியில் ராஹில் அறையில் எடுத்து  தங்கியிருத்து மானஸாவை நோட்டமிட்டான்.

 

இந்தநிலையில்  30-ம் தேதி மானஸா மதியம் தனது தோழிகளுடன் அறையில் சாப்பிட்டு கொண்டியிருந்த போது திடீரென்று அங்கு நுழைந்த ராஹில் தன்னுடன் பேசவா என மானஸாவை அழைத்துள்ளான் .அதற்கு கோபபட்ட மானஸா வெளியே போ என விரட்டியுள்ளார். இருந்தாலும் உன்னிடம் கடைசியாக பேச வேண்டும் நீ வா என அடுத்து இருந்த அறைக்குள் அழைத்தான். அதை நம்பி உள்ளே சென்ற மானஸாவை பதுக்கி வைத்தியிருந்த துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டான் ராஹில். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மானஸா துடிதுடித்து இறந்தார். அதைத்தொடர்ந்து  தன்னை தானே தனது நெற்றில் வைத்து சுட்டான் ராஹில். இதில் குண்டு துளைத்து பாிதாபமாக அவனும் இறந்தான்.

 

இது குறித்து கோதமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இரண்டு பரின் உடலையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  விசாரணை மேற்கொண்டு வருவதோடு ராஹிலுக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.