மஹிந்திரா& மஹிந்திரா நிறுவன தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.

anand mahindra to resign his chairman post of mahindra and mahindra

Advertisment

Advertisment

20.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள மஹிந்திரா& மஹிந்திரா நிறுவனத்தில் அடுத்த 15 மாதங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பல முக்கிய நிர்வாகிகள் ஓய்வு பெற்று புதிதாக அடுத்த தலைமுறைக்கு பதவிகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஏப்ரல் 1, 2020 அன்று மஹிந்திரா& மஹிந்திரா குழுமத் தலைவர் பதவியிலிருந்து ஆனந்த் மஹிந்திரா விலக உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. செபி மற்றும் நிறுவன வாரியத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு இந்த மாற்றம் நடைபெற உள்ளதாகவும், ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார். தலைவர் பொறுப்பிலிருந்து ஆனந்த் மஹிந்திரா பதவி விலகினாலும், நிர்வாக பொறுப்பில் இல்லாமல் ஆனந்த் மகேந்திரா நிறுவனத்தை வழிநடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.