Skip to main content

‘இ.டி. இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு சட்ட விரோதமானது’ - உச்சநீதிமன்றம் அதிரடி

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

ET  director Extension issue Supreme Court takes action

 

அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக் காலத்தை நீட்டித்தது சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 1984 ஆம் ஆண்டு இந்திய வருவாய்த்துறை அதிகாரியான எஸ்.கே. மிஸ்ராவை  2018  ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி இரண்டு ஆண்டுகள் பணிக் காலம் என்ற அடிப்படையில் அமலாக்கத்துறை இயக்குநராக மத்திய அரசு நியமித்து இருந்தது. அதன் பிறகு தற்போது வரை எஸ்.கே. மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார். இவருக்கு 2021 மற்றும் 2022 என இரண்டு முறை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

 

இதற்கிடையில் அமலாக்கத்துறை இயக்குநர் ஒருவருக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் பணி நீட்டிப்பு வழங்குவது உள்நோக்கம் கொண்டதாக இருக்கும் எனக் கூறி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பதவி நீட்டிப்பு மீண்டும் வழங்கப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விரிவாக நடைபெற்று வந்தது.

 

இந்நிலையில் அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே. மிஸ்ரா பதவிக் காலத்தை மூன்றாவது முறையாக நீட்டித்தது சட்ட விரோதமாகும். மேலும் எஸ்.கே. மிஸ்ரா ஜூலை 31 ஆம் தேதி வரை மட்டுமே தனது பதவியில் நீட்டிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்