Skip to main content

முலாயம் சிங் மறைவு - யோகி ஆதித்யநாத் அஞ்சலி

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

jjk

 

உடல்நலக்குறைவால் காலமான உ.பி. முன்னாள் முதலமைச்சர், சமாஜ்வாடி கட்சியின் நிறுவன தலைவர் முலாயம் சிங் உடலுக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மரியாதை செய்துள்ளார்.


உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (வயது 82) உடல் நலக்குறைவால் ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். 


உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முலாயம் சிங் யாதவ் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

Mulayam Singh Yadav's body will be cremated today!

 

மறைந்த முலாயம் சிங் யாதவின் இறுதிச் சடங்குகள் இன்று அவரது சொந்த ஊரில் நடைபெறவுள்ளன. 

 

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் நேற்று (10/10/2022) காலமானார். அவரது உடல் சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம், சைஃபாயில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் முலாயம் சிங் யாதவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

 

இன்று (11/10/2022) மாலை நடைபெறவுள்ள இறுதிச் சடங்கில், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 

 

முலாயம் சிங் யாதவின் மறைவையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று நாள் அரசுமுறை துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Next Story

“நெருக்கடியான கால கட்டத்தில் முலாயம் சிங் யாதவை இழந்திருக்கிறோம்..” - தமிமுன் அன்சாரி

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

“We have lost Mulayam Singh Yadav at a critical time.” – Tamimun Ansari

 

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) இன்று காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) இன்று காலமானார் என்ற செய்தி ஆழ்ந்த வருந்தத்தை தருகிறது. சோஷலிஸ போராளிகளான ராம் மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரால் அரசியலில் ஈர்க்கப்பட்ட அவர், பின்னாளில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் அவர்களால் அரசியலில் வார்த்தெடுக்கப்பட்டார். எமர்ஜென்ஸி நெருக்கடியை எதிர்த்து 19 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்த போது, உ.பி மாநில அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவானார்.

 

முன்னாள் பிரதமர் V.P.சிங் தலைமையில் ஜனதா தளம் எழுச்சி பெற்ற போது வீசிய அரசியல் அலையில், 1989ஆம் ஆண்டு உ.பி. மாநில முதல்வராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற தருணம் அயோத்தி பாபர் மஸ்ஜித் விவகாரம் மதவாத சக்திகளால் கொந்தளிப்பான நிலைக்கு எடுத்து செல்லப்பட்டிருந்தது. அக்கால கட்டத்தில் அந்த வளாகத்தை சட்டப்படி பாதுகாக்க அவர் எடுத்துக் கொண்ட நிர்வாக நடவடிக்கைகள் துணிச்சல் மிக்கவையாக இருந்தது. அம்மாநிலத்தில் மூன்று முறை முதல்வராக பணியாற்றிய அவர், பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டிற்காகவும், அவர்களின் மேம்பாடுகளுக்காகவும் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை.

 

ஐக்கிய முன்னணி ஆட்சி காலத்தில் ஜனதா தளத்தின் பிரதமர்களாக தேவகெளடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் பிரதமர்களாக இருந்த போது, ஒன்றியத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராக அவர் இருந்தார். அப்போது அவர் எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காலம் முழுக்க நினைவு கூறப்படும் என்பதில் ஐயமில்லை. அந்த துறையின் ஆகச் சிறந்த அமைச்சராக அவர் இருந்தார் என்பது அவரது நிர்வாக ஆற்றலை உணர்த்துகிறது. சமூக நீதி, மதச்சார்பின்மை கொள்கைகளில் உறுதியாக களமாடிய அவரது மறைவு, வட இந்திய அரசியலுக்கு பேரிழப்பாகும்.


முலாயம் சிங் யாதவ் போன்ற தலைவர்களின் பங்களிப்புகள் அதிகமாக தேவைப்படும் ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில் அவரை நாடு இழந்திருக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், சோஷலிஸ தோழர்களுக்கும், சமாஜ்வாடி கட்சியினருக்கும், உத்தரப் பிரதேச மாநில மக்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.