ADVERTISEMENT

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு; அக்டோபர் 1-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு!

03:57 PM Jul 31, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணையை அக்டோபர் 1-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது பாட்டியாலா நீதிமன்றம்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஏர்செல் பங்குகள் மலேசியாவிலுள்ள மேக்சிஸ் நிறுவனத்தில் விற்கப்பட்டதில் முறைகேடுகள் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.

மேலும் இந்த வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க சிபிஐ சம்மன் அனுப்பியது. இதனை தொடர்ந்து ப.சிதம்பரம் முன்ஜாமீன் வேண்டுமென டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த விசாரணையில் கடந்த ஜூலை 10-ஆம் தேதிவரை அவரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்திது வழக்கு விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதனை அடுத்து கடந்த ஜூலை 10-ஆம் தேதி நடந்த விசாரணையில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 7 -ஆம் தேதிவரை தடை விதித்துள்ளது. மேலும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தையும் கைது செய்ய தடைவிதித்து உத்தரவிட்டது பாட்டியாலா நீதிமன்றம்.

ஏற்கனவே கடந்த மாதம் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்த நிலையில் அண்மையில் ஜூலை 19-ஆம் தேதி ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு வழக்கை அக்டோபர் 1-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT