Skip to main content

யூட்யூப் பார்த்து குழந்தை பெற்றுக்கொண்ட 17 வயது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

17 year old girl self delivered a baby by watching youtube videos

 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மதிக்கத்தக்க மாணவி. இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவருகிறார். இவரின் தாய், கண் பார்வை குறைபாடு கொண்டவர். இவரது தந்தை, அவர்கள் வசிக்கும் இடத்தின் அருகே இருக்கும் ஊரில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில், அம்மாணவி வீட்டிலேயே யார் உதவியுமின்றி, பெற்றோருக்குத் தெரியாமல் குழந்தை பெற்றெடுத்துள்ளார். அவர் குழந்தை பெற்றெடுத்து மூன்று நாட்கள் கழித்தே அவரது பெற்றோருக்கு இவ்விஷயம் தெரியவந்துள்ளது.

 

வீட்டிலேயே தனக்குத் தானே பிரசவம் பார்த்துக்கொண்டதால் அம்மாணவிக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது அம்மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்ணின் வயது 17 என்பதால், மருத்துவமனை மூலம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இவர்களின் வீட்டருகே 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் வசித்துவருகிறார். அவருடன் மாணவிக்குப் பழக்கம் ஏற்பட்டு, காதலாகியுள்ளது என்றும், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையிலும் இருந்துள்ளனர். அதன் மூலம் அம்மாணவி கருத்தறித்துள்ளார்.

 

17 year old girl self delivered a baby by watching youtube videos
                                 மஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

 

இதனை பெற்றோரிடம் அவர் கூறாமல் மறைத்துள்ளார். கடந்த 20ஆம் தேதி மாணவிக்குப் பிரசவ வலி வந்துள்ளது. அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாணவி அவர் வீட்டின் மேல் உள்ள அறைக்குச் சென்றுள்ளார். பிறகு பிரசவம் குறித்து யூட்யூபில் பார்த்துள்ளார். அதனடிப்படையில் அவர், தனக்குத் தானே பிரசவம் பார்த்து, குழந்தையைப் பெற்றெடுத்து, தொப்புள் கொடியையும் அறுத்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், அவர் எந்த வெளியாட்களின் உதவியையும் பெறவில்லை என்றும், பிரசவம் முழுவதையும் தனக்குத் தானே மேற்கொண்டார் என்றும் தெரியவந்துள்ளது. பிரசவம் முடிந்த பின்பு வீட்டில் வழக்கம்போல் அவர் இருந்துள்ளார். அதேசமயம் அவர் அடிக்கடி வீட்டின் மேல் மாடிக்குச் செல்வதையும் பெற்றோர்கள் கவனித்துள்ளனர்.

 

ஆனால், கரோனா காலம் என்பதால் ஆன்லைன் வகுப்புகள் இருக்குமென அவர்களும் அதனைப் பெரிதாக கேள்விக்குள்ளாக்கவில்லை. இந்நிலையில், அக் 22ஆம் தேதி வீட்டின் மேல் அறையிலிருந்து குழந்தை அழுகுரல் கேட்டுள்ளது. எப்படி வீட்டிலிருந்து குழந்தை அழுகுரல் கேட்கிறது என அவரது பெற்றோர்கள் மேலே சென்று பார்த்தபோதுதான், இச்சம்பவம் தெரியவந்துள்ளது. இதனைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தங்கள் மகளிடம் விசாரித்தபோது அவர் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

 

அதுமட்டுமின்றி அவருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதும் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்தே அவரது பெற்றோர், அவரை மஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்து சேர்த்துள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். மருத்துவமனையில் மாணவிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவியும், அவரது குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், 17 வயது மாணவியைத் தாயாக்கிய அவ்வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.